tamilnadu

img

2 சரக்கு ரயில்கள் மோதியதில் 3 பேர் பலி

சிங்ரவுலி, மார்ச் 1- உத்தரப்பிரதேசத்தின் ரிஹாந்த் நகரில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று தேசிய அனல்மின் கழகத்திற்கு புறப்பட்டு சென்றது.  இதே போன்று காலியான மற்றொரு சரக்கு ரயில் எதிர்புறத்தில் இருந்து வந்தது. மத்திய பிரதேசத்தின் சிங்ரவுலி பகுதி யில் இந்த இரு சரக்கு ரயில்களும் நேருக்கு நேர் மோதின. இந்த சம்பவத்தில் நிலக்கரி கொண்டு சென்ற ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன.  மற்றொரு ரயிலின் பெட்டி களும் தடம் புரண்டன. இந்த விபத்தில் சரக்கு ரயில் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் சிக்கி இருக்க கூடும் என கூறப்பட்டது.  ஒரே ரயில் பாதையில் இரு ரயில்களை யும் இயக்க அனுமதி வழங்கப்பட்டதனால் விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.  ஒருவரை மீட்கும் பணி நடந்து வரு கிறது.